நா. பார்த்தசாரதி
109
(திண்ணை), 9. கூடம், 10. அங்கணம் (வீட்டுச் சாக்கடை), 11. முன்றில் (இல் முன்) 12.கதவு-கதவம் தாழ்ந்த பொருளாதார நிலையிலிருந்தவர்கள் தொடங்கிப் பெருஞ்செல்வ நிலையிலுள்ளோர் வரை உறையுள்களை அமைத்திருக்கின்றனர்.
தழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறையிறைக் குரம்பை56
புதுவை வேய்ந்த கவி குடில்57
ஈந்தலை வேய்ந்த வெய்புரக் கரம்பை58
குறவர் ஊன்றிய குரம்பை புதைய
வேங்கை தாஅய் தேம்பாய் தோற்றம்59
புல்வெய் குரம்பை புலர ஊன்றி
முன்றில் நீடிய முழவு...60
குறையிலாக் குரம்பைக் கொலைவெம்பாதவர் 61
குளகு மறுத்து உயங்கிய மருங்குல பலவுடன்
பாழுர்க் குரம்பை62
குரம்பை நம் மனைவயின் புகுதரும் 63
நல்கூர் பெண்டில்புல் வேய் குரம்பை
தழைகளை இணைத்துத் தருப்பைப் புற்களால் குடிசைகளை வேய்ந்தனர்.
புதிய வைக்கோலால் தாழ்ந்து நெருங்கிய குடில்களை அமைத்துள்ளனர்.
மலைவாழ் மக்களின் குடிசைமேல் வேங்கைப் பூக்கள் உதிர்ந்து அழகிய தோற்றத்தை உண்டாக்கியுள்ளன.
குடிசைக்கும் முன்றில் புழைக்கடை அமைப்புக்கள் இருந்துள்ளன. குடிசையும் மனைவீடு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன./65
மலைப்பாறைகளில் இயல்பாய் அமைந்த கல் முழைகளும் குறிஞ்சி நில மக்களால் வாழிடங்களாகப் பயன்படுத்தப் பெற்றிருக்கின்றன.