பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


கொத்துமல்லி பூபூக்க கொடிகொடியாய் காய்காய்க்க!
கொத்துக் கொத்தாய் நெல்விளையும் சீமையிது! நம்ம
குறைதீர்க்கும் பொன்விளையும் பூமியிது!

வாழைமடல் விரிய மண்ணிலே குலை சாய!
வந்தாரை வாழவைக்கும் சீமையிது!-நம்ம
மனசுபோல் பொன் விளையும் பூமியிது!

வாய்க்கால் கரைபுரள வயல்களிலே மீன்புரள!
வற்றாத வளம் கொழிக்கும் சீமையிது!-எதை
நட்டாலும் பொன் விளையும் பூமியிது!

கண்ணிலே கனிவிருக்க கருத்தினிலே துணிவிருக்க!
எண்ணத்தால் உயர்ந்தவங்க சீமையிது! உலகில்
எந்நாளும் பொன்விளையும் பூமியிது!

அநியாயம் செய்பவரை அஞ்சாமல் எதிர்த்து நின்று
தன்மானம் காத்துவரும் சீமையிது! -பெற்ற
தாயாகும் பொன்விளையும் பூமியிது!

பொன்னு விளையும் பூமி-1959

இசை : ரெட்டி
பாடியவர் : T. M. செளந்தரராஜன்