பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67


பச்சைப் பசுங்கிளியே!-ஜொலிக்கும்
பவள வண்ணச் சிலையே!
பிச்சையாக எனக்கே-கிடைத்த
பேரின்பப் பொக்கிஷமே!-தாலேலோ
கண்ணே தாலேலோ!

உச்சி குளிருதடா! கண்மணி
உன் முகம் பார்க்கையிலே!-என்
லட்சியப் பெருங்கனவே-எனது
நேத்திரம் நீ தாண்டா! தாலேலோ
கண்ணே தாலேலோ!

பாசக் கொடியாலே-எனையே
பற்றி இழுத்தவனே!
ஆசை வெறியில்லையடா-எனது
ஆனந்தம் நீ தாண்டா!  (பச்சை}

தாலாட்டி சீராட்ட-உன்னைப் பெற்ற
தாயின்று இல்லையடா!
தங்கமே அந்தக் குறை-தீர்ப்பதே
இங்கு என் கடமையடா! தாலேலோ!
கண்ணே தாலேலோ!