இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
187
(தொகையறா)
- சத்தியம் பொய்யாகும்! தருமம் தலைசாயும்!
- அறநெறிகள் அலைமோதும்! அதர்மம் அரசாளும்!
- பருவ நிலை மாறும்! பசுமைக்குப் பஞ்சம் வரும்!
- வறுமை சதிராடும்! மண்ணுலகே நரகாகும்!
(பாட்டு)
- அது முத்திய கலியின் அடையாளம்!
- அதன் முடிவே கல்கி அவதாரம்!
- எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்!
- என்னும் நிலைமை வரும்-அது
- பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும்
- பெரிதும் கலந்து விடும்!(அது)
- அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி
- அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி
- விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும்
- வியாபாரிகள் எனும் பெயரடைவார்!(அது)
- மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம்
- மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே
- மனங்காட்டும் புனிதக்கலை-மாறி
- நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம்
- வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக
- வெளிக்காட்டும் புதியகலை!(அது)