பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87



பெண் : தொடாதே!
மாமா! மாமா! மாமா!

ஆண் : ஏம்மா! ஏம்மா! ஏம்மா!

பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்திச் சுத்தி
கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?-தாலி
கட்டும் முன்னே கையும் மேலே படலாமா?
{-மாமா)

ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா?-கையைத்
தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?
(-ஏம்மா)

பெண் : ஊரறிய நாடறியப் பந்தலிலே!-நமக்கு
உற்றவங்க மத்தவங்க மத்தியிலே!
ஒண்ணாகி உறவுமுறை கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றாெருவர் பிடிக்கலாமா?-இதை
உணராம ஆம்பளைங்க துடிக்கலாமா?

ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே!-துாண்டி
போடுகிற உங்களது கண்ணாலே!
ஜாடை காட்டி ஆசை மூட்டி
சல்லாபப் பாட்டுப் பாடி