பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


படத்துறை இவரால்
           பயன்கள் பெற்றது;
பழந்தமிழ் இவரால்
     புதுத்தமி ழானது!
அடக்கம் இவரது
     அணிகலம் என்பேன்;
அகந்தை யாதென
     அறியாப் பெம்மான்;

ஆக்கிய பாடல்கள்
     அச்சில் வருவதால்
அடுத்த தலைமுறைக்(கு)
     அவைகள் உதவும்;
பாக்களின் மேன்மை
     படித்தால் புரியும்;
பாமரன் என்னால்
    புகலத் தரமோ?
 
செய்யநற் றமிழின்
    கீர்த்திக ளனைத்தும்
சிந்துகள் மூலம்
    செப்பிய மேதை!
வையம் பயனுற
    வாழ்ந்திட என்றும்
வேலன் திருவடி
    வணங்குகின்றேனே!


வாலி
2-2-86