பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230


சுயநலம் பெரிதா?
பொது நலம் பெரிதா?-இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறித் தவிக்கும் மனிதா-இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா!
(சுயநலம்)


துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா?
அன்பு இல்லாத
இதயம் இதயமா?
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா-இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா
(சுயநலம்)