இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
230
- சுயநலம் பெரிதா?
- பொது நலம் பெரிதா?-இந்த
- சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா
- மதி மயக்கத்திலே
- வரும் தயக்கத்திலே
- மனம் தடுமாறித் தவிக்கும் மனிதா-இந்த
- சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா!
- (சுயநலம்)
- துன்பம் இல்லாமலே
- இன்பம் உண்டாகுமா?
- அன்பு இல்லாத
- இதயம் இதயமா?
- நல்ல தேமாங்கனி
- என்றும் வேம்பாகுமா-இந்த
- சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா
- (சுயநலம்)