பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

291


சிரிப்பு.... .... .... ... இதன்
சிறப்பை சீர்தூக்கி பார்ப்பது நமது பொறுப்பு!...
கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்
காட்டும் கண்ணாடி சிரிப்பு-மனம்
கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்
காட்டும் கண்ணாடி சிரிப்பு


இது
களைப்பை நீக்கி கவலையைப் போக்கி,
மூளைக்குத் தரும் சுறு சுறுப்பு ....
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு ! இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில்
துலங்கிடும் தனி செழிப்பு !


பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப்
பல்லிளிப்பதும் ஒரு வகைச் சிரிப்பு-அதன்
பலனாய் உடனே பரிசாய் கிடைப்பது
காதறுந்த பழஞ் செருப்பு!


சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு! வேறு
ஜீவ ராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு !