பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152


ஆண் : சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே!
இன்பம் உருவாகப்
பொங்கும் அன்பின் அலையே!


பெண் : சிந்தும் இசையமுதம்
தென் பொதிகைத் தென்றலோ?
செங்கரும்போ? கனிரசமோ?
தேன் குயிலின் கொஞ்சலோ?


ஆண் : கண்ணே சகுந்தலையே! கண்கவரும் ஓவியமே!
கணமும் உனை மறவேன்! என் காதல் காவியமே!


பெண்; மன்னவரே! ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே!
என்னுயிரே! இன்று முதல் உமக்கேநான் சொந்தமே!


ஆண் : பெண்ணே மும்தாஜே! பேரழகின் பிம்பமே!
பேசும் பிறை நிலவே! என் வாழ்வின் இன்பமே!


பெண் : என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே!
எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே!
ஆடவந்த தெய்வம்-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசீலா