இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
152
- ஆண் : சங்கம் முழங்கி வரும்
- சிங்காரத் தமிழ்க் கலையே!
- இன்பம் உருவாகப்
- பொங்கும் அன்பின் அலையே!
- பெண் : சிந்தும் இசையமுதம்
- தென் பொதிகைத் தென்றலோ?
- செங்கரும்போ? கனிரசமோ?
- தேன் குயிலின் கொஞ்சலோ?
- ஆண் : கண்ணே சகுந்தலையே! கண்கவரும் ஓவியமே!
- கணமும் உனை மறவேன்! என் காதல் காவியமே!
- பெண்; மன்னவரே! ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே!
- என்னுயிரே! இன்று முதல் உமக்கேநான் சொந்தமே!
- ஆண் : பெண்ணே மும்தாஜே! பேரழகின் பிம்பமே!
- பேசும் பிறை நிலவே! என் வாழ்வின் இன்பமே!
- பெண் : என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே!
- எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே!
ஆடவந்த தெய்வம்-1960
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசீலா