பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


கோமள செழுந் தாமரை-எழில்
மேவிய குண சீலா
குலமே தான் விளங்க வந்த
அருந்தவ பாலா! (கோமள)

வளர் பிறையே வானமுதே
மாசிலாத பொன்னே!
மணமலரே தரையினிலே
தவழ விடோம் உன்னை!
வளநாடே உன் புகழைப்
பாடு மடா பின்னே!
வருங்கால மன்னவனே
வாழ்க எங்கள் கண்ணே! (கோமள)

கதிரவனே மாமன் உனைக்
காண ஓடி வருவார்!
கண் கவரும் கனக மணி
பொம்மைகளும் தருவார்!
மதிவாணா உன்னருமை
மாமி அலங்காரி
உனை வாரித் தழுவிடுவார்
உண்மை இன்பம் பெறுவாள்! (கோமள}