இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
145
- ஆண் : மல்லிகை முல்லை நறுமலரும்
- மயங்கித் தவிக்கும் எனதுயிரும்
- அள்ளிச் செறுகிக் கூந்தலிலே
- அழகாய் முடித்த பெண் மயிலே!
- துள்ளி யோடும் காவிரி நீ!-உனைச்
- சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்!
- ஆண் : மல்லிகை முல்லை நறுமலரும்
- பெண் : கள்ளம் இல்லா மனத்தாலே
- கவிதை பாடும் திறத்தாலே
- உள்ளம் உருகச் செய்தவரே!
- உணர்வில் ஒன்றிக் கலந்தவரே!
- ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ!
- சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்!
- ஆண் : செந்தமிழ் நாட்டின் சீருயர
- வந்திடும் காவிரி நதி போலே
- அந்தகன் எனது வாழ்வுயர
- அன்பின் வெள்ளம் தந்தவளே!
- பெண் : சிந்தனைக் கதவும் திறந்திடவே
- செய்திடும் அறிவுச் சுடர் போலே
- மங்கை எனது மதி மயக்கம்
- மாறிடும் விந்தை புரிந்தவரே!
- ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ!
- பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடல் நீ!