பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195


பட்டு : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்!
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும் !
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்!
உண்மையிதை உணர்ந்து நன்மைபெறப் படித்து
உலகில் பெரும் புகழ் சேர்த்திடடா!
குமரன் : பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று
பலரும் போற்றப் புகழ் பெறுவேன்!
பட்டு : சபாஷ்!
அக்கம் பக்கமே பாராது!
ஆட்டம் போடவும் கூடாது!
அழுவதும் தவறு! அஞ்சுவதும் தவறு!
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு!
குமரன் : அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்!
இந்த நாட்டின் வீரனாவேன்!
பட்டு : சபாஷ்!
தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண்கலங்குவாயா? துணிந்து நிற்பாயா?
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ!