பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85



ஆண் : வம்பு ஏனம்மா? வாங்க! அதை தாங்க! வந்த
வழிபார்த்து நேராகப் போங்க! நீங்க
வழி பார்த்து நேராகப் போங்க!

பெண் : வழிபார்த்து நான் போகவே-எந்தன்
மனம் நாடும் நிலவாகி வழிகாட்டுங்க!

ஆண் : ஆ... ... ...

பெண் : ஊம்... ... ...

ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை!

பெண்: என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!

ஆண் : ஊம்!

இருவர்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா