பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62



பெண்: கண்ணுக்கு நீ யொரு கன்னிப் பொண்ணு!-என்
கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு!
உண்ணடியோ சோறு உண்ணடியோ!-நீ
ஒட்டாரம் பண்ணுவ தென்னடியோ!

ஆண்: வண்ணச் சம்பா குத்தி சோறாக்கி
வாளைமீன் துண்டத்தைச் சாறாக்கி
வஞ்சம் அறியாத பெண் உனக்கு-நல்ல
வஞ்சர மீனும் பொரிச்சிருக்கு!

பெண்: உருவத்தில் நீ யொரு செங்கரும்பு!
உள்ளத்தில் சின்னஞ்சிறு அரும்பு!-நீ
ஓடியாடி பண்ணும் அக்குறும்பு-இந்த
உலகமறியா பிள்ளைக் குறும்பு!

ஆண்: இது பிஞ்சில் பழுக்கிற காலமடி!-பதி
னஞ்சில் இது என்ன கோலமடி!
நெஞ்சில் உன் எதிர்காலம் வந்து!-என்னை
சஞ்சலத்துக்கு ஆளாக்குதடி

உள்ளத்தில் குழந்தையடி -1978

இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் & வாணி ஜெயராம்