பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150


ஆல மரத்துக்கிளி!
ஆளைப்பார்த்துப் பேசும் கிளி!
வால வயசுக் கிளி!-மனம்
வெளுத்த பச்சக்கிளி!-மனம்
வெளுத்த பச்சக்கிளி!


முத்து முத்தா பனித்துளியாம்!
முகம் பார்க்கும் கண்ணாடியாம்!
கொத்துக் கொத்தாப் பழக்குலையாம்!
குமரிப் பெண்ணின் முன்னாடியாம்!


புள்ளையில் உசந்த புள்ளே!
பூமியிலே என்ன புள்ளே?-அது
வள்ளலாட்டம் உள்ளதெல்லாம்
வாரி வழங்கும் தென்னம் புள்ளே!


வாழையடி வாழையாக வாழணுமிண்னு
வாழ்த்துறதுலே இருக்கு தத்துவம் ஒண்ணு!
தாய்மையின் தியாகச் சின்னம் தானேயிண்ணு-குலை
தள்ளி வாழை ஒண்ணு சொல்லுது நின்னு!