பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

299


அந்தி சாயிற நேரம்!
மந்தாரைச் செடியோரம்!-ஒரு
அம்மாவைப் பார்த்து-ஐயா
அடிச்சாராம் கண்ணு-அவ
சிரிச்சாளாம் பொண்ணு!


கொக்கர கொக்கர கொக்கரகோன்னு
குயிலைப் போல பாடிடுவா!
கொக்கரக்கோ! கொக்கரக்கோ!
கொக்கர கொக்கர கொக்கரக்கோ!


பல்லாக்கு போல நெளிஞ்சி ஆடி
பார்த்தவர் மனசை லாவிடுவா!
பப்பரபூ பப்பரபூ
பப்பர பப்பர பப்பரபூ!


தத்தித் தத்தி அன்னம் போலே
தாவியே நடையும் போட்டிடுவா!
டர்ரரடன் டர்ரரடன்
டர்ரர டர்ரர டர்ரரடன்!


பக்காப் பொண்ணு ஐயாமேலே
சொக்குப் பொடியும் தூவிட்டா!
தக்கிடஜம் தக்கிடஜம்
தக்கிட தக்கிட தக்கிடஜம்!


மந்திரிகுமாரி-1950


இசை : G. ராமநாதன்

பாடியவர் : T. M. செளந்தரராஜன் குழுவினர்.