பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81




ஆண் : வாராய் நீ வாராய்!
போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்!

பெண் : ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே!

ஆண் : இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய்! அங்கே வாராய்!

பெண் : அமைதி நிலவுதே! சாந்தம் தவழுதே!
அழிவில்லா மோன நிலை சூழுதே!

ஆண் : முடிவில்லா மோன நிலையை நீ!-மலை
முடியில் காணலாம் வாராய்!

பெண் : ஈடிலா அழகை சிகரமீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்!

ஆண் : இன்பமும் அடைந்தே இகம் மறந்தே
வேறுலகம் காணுவாய் அங்கே!
வாராய்! நீ வாராய்!
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயேவாராய்!

மந்திரி குமாரி-1950

இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & ஜிக்கி