இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
248
- (தொகையறா)
- விளக்கினைப் பழம் என்று கருதியே ஏமாந்து
- விட்டிலும் விழுவதேனோ? ஆண்களின்
- வெளி வேஷப் பேச்சிலே மயங்கியே பெண்கள்
- எனைப் போல் நலிவதேனோ?
- (பாட்டு)
- சிந்திக்கும் தன்மையற்றதாலா? அல்லது முன்
- ஜென்மத்தில் செய்த வினையாலா? இன்பம் தனை
- துன்பம் தொடரும் என்பதாலா? உலகமே
- சூதின் வடிவம் என்பதாலா
- (சிந்)
- (தொகையறா)
- சதி செய்யும் சுய நலக் கும்பலாய் ஆண்களும்
- தரணியிலிருப்ப தேனோ?
- தங்கள் மனம் போலவே தாய்க்குலம் தன்னையே
- வீணாக வதைப்ப தேனோ?
- (பாட்டு)
- நம்பிடும் பெண்கள் உள்ளதாலா?-உலகிலே
- நயவஞ்சகம் மலிந்ததாலா?
- தெம்பில்லாப் பேதை என்பதாலா?-சிலரிங்கே
- தெய்வமே இல்லை என்பதாலா?
- (சிந்)
சமய சஞ்சீவி-1957
- இசை: G. ராமநாதன்