பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248


(தொகையறா)
விளக்கினைப் பழம் என்று கருதியே ஏமாந்து
விட்டிலும் விழுவதேனோ? ஆண்களின்
வெளி வேஷப் பேச்சிலே மயங்கியே பெண்கள்
எனைப் போல் நலிவதேனோ?
(பாட்டு)
சிந்திக்கும் தன்மையற்றதாலா? அல்லது முன்
ஜென்மத்தில் செய்த வினையாலா? இன்பம் தனை
துன்பம் தொடரும் என்பதாலா? உலகமே
சூதின் வடிவம் என்பதாலா
(சிந்)
(தொகையறா)
சதி செய்யும் சுய நலக் கும்பலாய் ஆண்களும்
தரணியிலிருப்ப தேனோ?
தங்கள் மனம் போலவே தாய்க்குலம் தன்னையே
வீணாக வதைப்ப தேனோ?
(பாட்டு)
நம்பிடும் பெண்கள் உள்ளதாலா?-உலகிலே
நயவஞ்சகம் மலிந்ததாலா?
தெம்பில்லாப் பேதை என்பதாலா?-சிலரிங்கே
தெய்வமே இல்லை என்பதாலா?
(சிந்)
சமய சஞ்சீவி-1957
இசை: G. ராமநாதன்