இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
144
- ஆண் : புருவமெனும் வில்வளைச்சு
- பருவமெனும் அம்பெவச்சு
- புள்ளி மான் போல் குதிச்சு
- வெள்ளி மீனைக் கண்ணில் வச்சு
- (சும்மா)
- பெண் : வருபவங்க எல்லோருக்கும்
- அருமையான வழியைக் காட்டி
- புதுமையான பாதையிலே
- போவதற்கு ஆசைமூட்டி
- (சும்மா)
- ஆண் : ஒ! துள்ளித் துள்ளி ஆடிவரும் உன்னைக் கண்டா
- சுத்திச் சுத்திப் பாக்காத கண்ணும் உண்டா!
அல்லி பெற்ற பிள்ளை-1959
- இசை: K. V. மகாதேவன்
- பாடியவர்கள் : T.M. சௌந்தரராஜன் & P. சுசீலா