பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144


ஆண் : புருவமெனும் வில்வளைச்சு
பருவமெனும் அம்பெவச்சு
புள்ளி மான் போல் குதிச்சு
வெள்ளி மீனைக் கண்ணில் வச்சு
(சும்மா)


பெண் : வருபவங்க எல்லோருக்கும்
அருமையான வழியைக் காட்டி
புதுமையான பாதையிலே
போவதற்கு ஆசைமூட்டி
(சும்மா)


ஆண் : ஒ! துள்ளித் துள்ளி ஆடிவரும் உன்னைக் கண்டா
சுத்திச் சுத்திப் பாக்காத கண்ணும் உண்டா!
அல்லி பெற்ற பிள்ளை-1959
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T.M. சௌந்தரராஜன் & P. சுசீலா