இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
156
- தேன்கூடு! நல்ல தேன்கூடு!
- திருமகள் வாழ்ந்திடும் என்வீடு!
- காணும்போது இனிக்கும்!-மதுரைக்
- கதம்பம் போல மணக்கும்!
- கண்ணைக் கவ்வி இழுக்கும்!-தன்னை
- உண்ணச் சொல்லி அழைக்கும்!(தேன்)
- வாடும் மனதை மூடும் கவலை
- மதுவில் கரைந்தே பறந்தோட
- வாழ்வில் நிம்மதி தேடும் செல்வச்
- சீமான் மயங்கி உறவாட!(தேன்)
- கலையால் வீசும் வலையால்-காதல்
- விலையே பேசும் கிளி நான்!
- கலையா போதை நிலையால் ஆளைக்
- கவரும் காந்தச் சிலைதான்!
- போனது எல்லாம் போகட்டும்!-மனம்
- புதுப்புது கனவுகள் காணட்டும்!
- ஆனது எல்லாம் ஆகட்டும்!
- அதில் அதிசயக் காட்சிகள் தோணட்டும்!
ஆட்டுக்கார அலமேலு-1976
- இசை : சங்கர், கணேஷ் -
- பாடியவர்: P. சுசிலா