பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202


ஆண் : காலணா மிஞ்சாதையா!
காலணா மிஞ்சாதையா!
பெண் : ஆலையில் பாடு படும்
ஏழைகள் வாழ்வினிலே(காலணா)
ஆண் : ஜாலியாய் வாழ்ந்திடலாம்
ஜாலியாய் வாழ்ந்திடலாம்
நினைத்தால் உலகையெல்லாம்
பணத்தால் வாங்கிடலாம்!
பெண் : பாட்டாளியே வறுமைக்
கூட்டாளியே-எண்ணிப்
பாரய்யா உன்நிலையை இந்நாளிலே!
ஆண் : நோட்டாக வந்த
கூட்டாளியே-மனக்
கோட்டையெல்லாம் உன்னால் ஈடேறும்!
பெண் : ஒண்ட நிழல் சொந்தமில்லே!
ஓய்வுமட்டும் சிறிதுமில்லே!
ஆண் : கண்டபடி களிப்புறவே
காலந்தான் போதவில்லே!
கோரஸ் : ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்வினிலே!(காலணா)