பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188


புல்லரும் பொய்யரும் கள்வரும் கயவரும்
புயவலி கொண்டாட-பெரும்
செல்வமிகுந்தவர் வல்லமையுற்றவர்
ஜெயம் ஜெயமென்றாட-மிக
நல்லவர் ஏழைகள் ஞானிகள் மானிகள்
உள்ளம் பதைத்தாட-கொடும்
நாலாம் யுகமது முடிவுறும் நாள்வர
கோள்களும் கூத்தாட-மனிதப் பேய்களும் கூத்தாட!
"வெடி படு மண்டத் திடிபல தாளம் போடும்-வெட்ட
வெளியிலிரத்தக் களியோடு பூதம் பாடும்"-சட்டச்
சட சட வென்று எரிமலை வெடித்தே சாடும்-கட்டக்
கட கட கட வென பூமி பிளந்தேயாடும்!
புயலுமெழுந்திடும்! மழையும் பொழிந்திடும்!
அலைகடல் பொங்கும் உலகையழிக்கும்
ப்ரளயம்-மஹாப்ரளயம்-மஹாப்ரளயம்.
தசாவதாரம்-1975
இசை : ராஜேஸ்வரராவ்
பாடியவர் : A. L. மகாராஜன்