இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
188
- புல்லரும் பொய்யரும் கள்வரும் கயவரும்
- புயவலி கொண்டாட-பெரும்
- செல்வமிகுந்தவர் வல்லமையுற்றவர்
- ஜெயம் ஜெயமென்றாட-மிக
- நல்லவர் ஏழைகள் ஞானிகள் மானிகள்
- உள்ளம் பதைத்தாட-கொடும்
- நாலாம் யுகமது முடிவுறும் நாள்வர
- கோள்களும் கூத்தாட-மனிதப் பேய்களும் கூத்தாட!
- "வெடி படு மண்டத் திடிபல தாளம் போடும்-வெட்ட
- வெளியிலிரத்தக் களியோடு பூதம் பாடும்"-சட்டச்
- சட சட வென்று எரிமலை வெடித்தே சாடும்-கட்டக்
- கட கட கட வென பூமி பிளந்தேயாடும்!
- புயலுமெழுந்திடும்! மழையும் பொழிந்திடும்!
- அலைகடல் பொங்கும் உலகையழிக்கும்
- ப்ரளயம்-மஹாப்ரளயம்-மஹாப்ரளயம்.
தசாவதாரம்-1975
- இசை : ராஜேஸ்வரராவ்
- பாடியவர் : A. L. மகாராஜன்