பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

293


சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
திருமணமாம் ! - இரவில்
சோளத்தட்டை பல்லாக்கிலே
ஊர் வலமாம் !


நொண்டிக்காலு நண்டுப் பொண்ணு
நாட்டியமாம் !
நுரைத் தவளை மேளதாள
வாத்தியமாம்!
தொண்டையில்லாக் கோட்டானும்
சுதியை விட்டு பாடிச்சாம் !
கண்சிமிட்டி மின்மினியும்
காந்தலைட்டு போட்டுச்சாம் !


நஞ்ச வயல் சேறு அங்கே
சந்தனமாம்!
நத்தாங் கூட்டுத் தண்ணிரே
பன்னீராம் !
புஞ்சைக் காட்டுக் குருவித் தழை
போட்டுக் கொள்ள வெத்திலையாம் !
வந்திருந்த கும்பலுக்கு
சோறுமட்டும் பத்தலையாம் !


கைதி கண்ணாயிரம்


இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: M. S. ராஜேஸ்வரி