பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111


ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு!-கண்
பார்வை போடுதே சுருக்கு!
பெண் : பாதையிலே பல வளைவிருக்கு!-உங்க
பார்வையிலே நம்ம உயிரிருக்கு!
ஆண் : நானிருக்கும் போது பயமெதற்கு?- என்
நாட்டமெல்லாம் உன் மேலிருக்கு!
பெண் : ஆனைக்கும் உண்டு அடிசறுக்கு!-இதை
அறிந்தும் ஏனோ வீண்கிறுக்கு!


பெண் : நெஞ்சினிலே புது நினைவிருக்கு !-அதில்
நேசத்தினால் வரும் மணமிருக்கு!
ஆண் : நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு!-நல்ல
நேரமும் இடமும் கிடைத்திருக்கு!
பெண். எங்கும் இன்பம் நிறைந்திருக்கு!-அதில்
இருமனம் ஒன்றாய்க் கலந்திருக்கு!


படிக்காத மேதை-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: A.L. ராகவன் & ஜமுனாராணி