பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97


ஆண்
சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே!
பெண்
கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே!
ஆண்
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை போல - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும்
கண்ணீர்த் துளியைப் போலே (சொட்டு)
பெண்
முட்டாப் பயலே மூளையிருக்கா
என்று ஏழைமேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே - மழை (சொட்டு)
ஆண்
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே
முக்காடு எதுக்கு? - உன்
முக்காட்டை நீக்கு! தலை ஈரத்தைப் போக்கு!
பெண்
இருக்க இடங்கொடுத்தா என்னையே நீ தாக்குறே!
குறுக்கு மூலை பாயுறே! கோணப் புத்தியெக் காட்டுறே!