பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

239


சாமி சாமி என்று ஊரை ஏய்க்கின்ற-ஆ
சாமி ரொம்ப இந்த நாட்டிலே!-ஒரு
சாண் வயித்துக்காக ஆண்டவன் பேரையும்
சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே-ஏ சாமியோ!-நடு
சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே!
(சாமி)


தாடிசடைமுடி தண்டு கமண்டலம்
கொண்டவனெல்லோரும் சாமி!-நல்லாப்
பாடுபட விரும்பாத திருவோட்டுப்
பரதேசிப் பயல்களும் சாமி!
கூடுபொய் வீடுபொய் குடும்பம் பொய் எனப்பாடும்
கேடுகெட்டவன் ஒரு சாமி!
தன்குட்டு மறைய வேடம் கட்டிக் கடவுள் பெயர்
குரைக்கும் நாயும் ஒரு சாமி!-இப்படி
(சாமி)


கட்டின பெண்டாட்டிதனை விட்டுவிட்டு ஓடிவந்த
கையாலாகாதவனும் சாமி!
கடனைவாங்கித் திருப்பித்தரமுடியாத காரணத்தால்
காஷாயம் உடுத்தவனும் சாமி!
சுட்ட திருநீறு பூசித் துந்தனாவை மீட்டி வரும்
துடுக்கனும் கூட ஒரு சாமி!
விட்டெறிந்த எச்சிலையை வீதியில் பொறுக்கித்தின்னும்
கிறுக்கனும் கூட ஒரு சாமி! இப்படி
(சாமி)