இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
297
- ஆண் : சீனத்து ரவிக்கை மேலே
- சேலம் பட்டு சரிகைச் சேலே!
- ஓரங் கிளிஞ்ச தென்னடி?-எங்குருவிக்காரி
- உண்மையைச் சொல்லிப் போடடி!
- பெண்: பானையை எறக்க நானும்
- பரணை மேலே ஏறும் போது
- ஆணி மாட்டிக் கிழிஞ்சி போச்சுடா!-எங்குருவிக்காரா
- அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா!
- ஆண் : மாலை வெயில் டாலடிக்கும்
- மாம்பழக்கன்ன நிறம்
- மாறிச் சிவந்த தென்னடி?-எங்குருவிக்காரி
- மர்மம் விளங்கச் சொல்லடி!
- பெண்:மாலையிட்ட மம்முதனே!
- காலையிலே உன்னுடைய
- வாண்டுப் பயல் கடிச்சிப் போட்டாண்டா!-எங்குருவிக்காரா
- தாண்டியே குதிக்க வேணாண்டா!
- ஆண் : சீவி சிணுக்கெடுத்து
- சிங்காரிச்சு பூவும் வச்சு
- கோயிலுக்குத் தானே போனே?-எங்குருவிக்காரி
- கூந்தல் கலைஞ்சதென்னடி?
மருத-18