270
உள்ளம்: ஏ மனிதா! எங்கே ஓடுகிறாய்?........நீ
எங்கே ஓடுகிறாய்?
வறுமை இருளால் வழி தடுமாறி
மதிமயங்கி குருடனைப் போலே! எங்கே
ஓடுகிறாய்?
உருவம் : வறுமையின் உருவம்! பூமிக்கு பாரம்!
வாழ்ந்தென்ன சாரம்! தீராவி சாரம்!
குழந்தை: (எங்கே அப்பா)
உள்ளம் : ஊழ்வினைப் பயனை வென்ற தாரடா?
உன் நிழல் உன்னை பிரிந்திடுமோடா?
குழந்தை: (பிள்ளை யாரப்பா)
உருவம் :மண்ணில் பிறந்த மனித பொம்மை நாம்
மண்ணுடன் மண்ணாய் கலப்போம் ஒரு நாள்
குழந்தை: (பூஜை செய்யணும் அப்பா)
உருவம் :நாளும் கிழமையும் நலிந்தவர்க் கேது?
நலம் பெற உலகில் மரணமே தோது?
உள்ளம் : வாழ்வதற்கே தான் பிறந்தாய் உலகில்?
உருவம் : வாழ்வ தெவ்விதம் எந்தன் நிலையில்?
உள்ளம் : பொறுமை வேண்டும்!
உருவம் : பொறுத்தது போதும்!