பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

225


இருந்தும் இல்லாதவரே- எல்லாம்
இருந்தும் இல்லாதவரே-அவர்கள்
இருப்பது உண்மையில் பெருந்தவறே-உலகில் (இருந்)
செல்வம் இருந்தென்ன? சிறப்புகள் இருந்தென்ன?
கள்ளமில்லா உள்ளம் இல்லாதவர் எல்லாம் (இருந்)
மணக்கும் ஜாதி மல்லி மலரைத் தள்ளி-கண்ணைப்
பறிக்கும் காகிதப்பூ வாங்குவோர்-வெளி
அழகில் ஆசை கொண்டு ஏங்குவோர்
மலர் விட்டு மலர் தாவி மது வுண்ணும் வண்டாகி
மனநிலை தடுமாறி வாழ்ந்திடுவோர் எல்லாம் (இருந்)
கொங்கு நாட்டு தங்கம்-1961
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா