பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237


பார்க்காத புதுமைகளெல்லாம்
கண்ணாரப் பாரடி பொம்மி!
கேட்காத சங்கதி யெல்லாம்
காதாரக் கேளடி பொம்மி!


ஆம்பளெ வந்து ஆடிப்பாடினா
அவனுக்கு பைசா கெடைக்காது!
அழகுப் பொம்பளெ ஆடிப்பாடினா
அதுக்குக் கெடைக்குது பணம் காசு!
அரும்பு மீசையில் கையைப் போடுது
அங்கே பாரு! ஒரு கேசு!
குறும்பாப் பாத்துப் பல்லை இளிக்குது
கூறு கெட்ட ஒரு முண்டாசு!
(பார்க்காத)


தெருவுக்குத் தெருவு சந்திக்கு சந்தி
டிங்கி அடிக்கிற ஒரு கூட்டம்!
இருக்கிற இருப்பெ பொழப்பையும் மறந்து
இங்கு செய்யுமாம் ஆர்ப்பாட்டம்
வரவுக்கு மிஞ்சி செலவுகள் பண்ணி
மஜா தேடுற ஒரு கூட்டம்
இரவு ராணிகள் வலையில் விழுந்து
ஏங்கி நிக்குமாம் குரங்காட்டம்!
(பார்க்காத)