பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105


ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது!
பெண் : நெஞ்சைத் தொட்டுத் தொட்டு ஆசைகளை
புட்டு புட்டுச் சொல்லுது!
ஆண் : என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு?
பெண் : என்னமோ பண்ணுது என்னத்தைச் சொல்ல...
(மழை)
பெண் : கட்டுக் குலையாத-அரும்பைத்
தொட்டு விளையாட-நெருங்கி
ஒட்டி உறவாட வந்தது காத்து!
ஆண் : மொட்டுச் சிரிப்பாட-இதழில்
பட்டு விரிப்பாட-அழகைக்
கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து!
பெண் : பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சு!
ஆண் : அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சு!
(மழை)

மருத-6