பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167


உன்னைக் காண ஏங்கும்!-அன்பே
என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்?
ஒளி மின்னல் மாறி இளங்கன்னியாகி
எனைக் கொள்ளை கொண்ட அன்பே!
எண்ணப் பொய்கையில் அன்னம் போலவே
இன்பமாக நீந்தி-புது
அன்புப் பார்வை ஏந்தி!-ஆனந்தம்
தந்த சூர்ய காந்தி!-சுவை
கன்னல் கொஞ்சிடும் உன்சொல்லைக் கேட்டுநான்
காண்பதென்று சாந்தி!
சிந்துபாடியே வந்து என்னையே
சொந்தமாக்கிக் கொண்டாய்!-உன்
சொந்தமாக்கிக் கொண்டாய்!-மெய்க்காதல்
பந்தத்தாலே வென்றாய்-நம்
சொந்த பந்தத்தை சிந்தியாமலே
இன்று எங்கு சென்றாய்?
மணிமேகலை-1959
இசை : G. ராமநாதன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்