இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
167
- உன்னைக் காண ஏங்கும்!-அன்பே
- என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்?
- ஒளி மின்னல் மாறி இளங்கன்னியாகி
- எனைக் கொள்ளை கொண்ட அன்பே!
- எண்ணப் பொய்கையில் அன்னம் போலவே
- இன்பமாக நீந்தி-புது
- அன்புப் பார்வை ஏந்தி!-ஆனந்தம்
- தந்த சூர்ய காந்தி!-சுவை
- கன்னல் கொஞ்சிடும் உன்சொல்லைக் கேட்டுநான்
- காண்பதென்று சாந்தி!
- சிந்துபாடியே வந்து என்னையே
- சொந்தமாக்கிக் கொண்டாய்!-உன்
- சொந்தமாக்கிக் கொண்டாய்!-மெய்க்காதல்
- பந்தத்தாலே வென்றாய்-நம்
- சொந்த பந்தத்தை சிந்தியாமலே
- இன்று எங்கு சென்றாய்?
மணிமேகலை-1959
- இசை : G. ராமநாதன்
- பாடியவர் : T. M. செளந்தரராஜன்