இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
141
- கவிதா : பார்க்கப் பார்க்க மயக்குதடி
- பார்வையாலே அழைக்குதடி!
- வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே!
- கோரஸ் : வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே!
- (பார்க்க)
- கவிதா : பாத்தி கட்டித் தோட்டக்காரன்
- பரிவுடனே வளர்த்த கொடி!
- லீலா : பொங்கும் இளம் பருவத்தினால்
- பூத்து நின்று குலுங்குதடி!
- கோரஸ் : புதுப்புது கனவுகள் காணுதடி!
- காணுதடி காணுதடி!
- கவிதா : ஆதவனைக் கண்டு
- ஆசை மிகக் கொண்டு
- தாமரைப் பெண் இதழ் விரியும்!
- கோரஸ் : முகம் மலரும்
- லீலா : காதலனைக் கண்டு
- நீயது போல் நின்று
- கண்ணாலே பேசும் ஒரு
- கோரஸ் : நாளும் வரும்!