இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
276
ராஜீ:எங்கே?........ எங்கே?........ நீ எங்கே?
- குங்குமச் சிமிழே ! கோபுரவிளக்கே!
- தங்கக் கலசமே! தாமரைப் பூவே!
- (எங்கே)
- திருமுகத்தின் அழகை நிலாதிருடிச் சென்றதோ?
- செவ்விதழைக் கொவ்வைக் கனி கவ்விக் கொண்டதோ?
- கருவிழிகள் புள்ளி மானைக் கலந்து கொண்டதோ? என்
- கண்பட்டுத்தான் காலம் உன்னைக் கவர்ந்து சென்றதோ?
- (எங்கே)
- மழலை மொழியை கிளிகளுக்கு வழங்கி விட்டாயோ?
- மண்ணை விட்டு விண்வெளியில் பறந்து விட்டாயோ?
- நிழலைப்போல நேருவை நீ தொடர்ந்து விட்டாயோ?
- நிம்மதியாய் அமரவாழ்வை அடைந்து விட்டாயோ?
- (எங்கே)