பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அறிவுக்


ரஸ்கின்

7. பெருந்தகைமையைக் காண்பதிலோ, பிறர்க்கு அன்பு செய்வதிலோ ஆனந்தம் காண்பதே கருணையின் பூரண லட்சணம்.

ரஸ்கின்

8.அன்பு செய்பவர், பேருண்மைகளை உணர்ந்து உரைப்பவர். இவர்கள் அனைவரும் கவிஞர்களாவர். உண்மைகளில் எல்லாம் தலைசிறந்த உண்மை அன்பேயாகும்.

பெய்லி

9. இதயமே-அன்பே-பெரிய எண்ணங்களின் பிறப்பிடம்.

வாவனார்கூஸ்

10. அறிவை விலைக்கு வாங்க முடியும்; ஆனால், உணர்ச்சி-அன்பு-ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.

ஜே. ஆர். லவல்

11. மாறுதல் கண்டவுடன் மாறும் அன்பு அன்பாகாது

ஷேக்ஸ்பியர்

12. அன்பும் நம்பிக்கையுமே ஆன்மாவின் தாய்ப் பால். அன்பும் நம்பிக்கையும் பெறாவிடில் ஆற்றல் முழுவதும் அழிந்துபோகும்.

ரஸ்கின்