இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கனிகள்
37
175.அறியாமலே எம் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு.
விக்டர் ஹகோ
176.ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும்.
ஹூக்கர்
177.சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர்.
லவல்
178.கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்; முதலாவதாக நல்ல மனச்சான்று; இரண்டவாதாக மன ஆரோக்கியம்; மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம்.
ஸெனீகா
179.பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம்.
லெய்ட்டன்
180. அன்பும் அறமும் எவ்வளவு, சுவர்க்கமும் அவ்வளவே.
-பார்க்கர்