பக்கம்:ஆஞ்சநேய புராணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆதிபராசக்தி துணை
ஆஞ்சநேய புராணம்
அ. திருமலைமுத்துசுவாமி
காப்பு
(கட்டளைக் கலித்துறை)

    மங்கா புகழ் நங்கைநல்லூரின் நல்லன்பர் நாயகனே
    குங்கும மங்கல வைமெய்க் கணிந்திட்ட கோலத்தினய்
    எங்களின் வித்தக னேவர சித்திவி நாயகனே
    அங்கணன் மைந்த அனுமனைப் பாடற் கருளுவையே!

நூல்
(இணைக்குறளாசிரியப்பா)

    ஆஞ்சநேய வாஅழ்க! ஐயன்தாள் வாழ்க !
    புங்கமில் பெருங்குணத்தா னருந்தாள் வாழ்க!
    என்றுமென் னெஞ்சி லிருப்பான்தன் தாள் வாழ்க !
    அன்று கடிகையிலெனை யாண்டான் தாள் வாழ்க !

5 தன்றுயிர் தானறப் பெற்றான் தாள் வாழ்க !
    மன்னுயிர் காக்கும் மாருதிதன் தாள் வாழ்க !
    அழுக்கா றவாவறவே களைந்தான்றன் தாள் வாழ்க !
    ஒழுக்க முயிரினு மோம்பினுன் தாள் வாழ்க !
    அறனறிங் தான்றமைந்த அண்ணல் அடிவாழ்க !

10 திறனறிந்து தீதகற்றும் தீர னடிவாழ்க !
    ஆழியா னருள் நின்ற வடியவன்றன் அடிவாழ்க !
    பாழியந் தடங்தோள்ப் பாவனன் அடிவெல்க !
    நிலையிற் றிரியாது நின்றான் அடிவெல்க !
    கலையெல்லாம் கற்றான்றன் கவினார் அடிவெல்க !