பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


மரணத்தின்போதுதான் உணர்ந்தேன். திருமணமாகி மூன்றாண்டுகளுக்குப்பிறகு என் உள்ளத்தில் சிறு அருவருப்பு ஏற்பட்டு கேரளத்திலுள்ள ஒரு பெரிய டாக்டரிடம் நானும் என் மனைவியும் ரத்தப்பரிசோதனை செய்து கொண்டோம். பதினைந்து நாட்கள் வரை அவரிடமிருந்து எனக்கு எந்த 'ரிசல்ட்டும்' வரவில்லை, நான் ஊரில் இல்லாத நேரத்தில் திடீரென்று அவரிடமிருந்து 'ரிசல்ட்' வந்துவிட்டது. அதில் அவர் "இனிமேல் உனக்கு புத்திர பாக்கியம் இல்லை இந்த ரகசியம் உன் மனைவிக்குத் தெரியக்கூடாது" என்ற எழுதி விட்டார். நான் இல்லாத நேரத்தில் அந்தக் கடிதம் வந்ததால் என் மனைவி அந்தக் கடிதத்தை உடைத்துப் பார்த்து விட்டாள். அந்தக் கடிதமே அவளுக்கு எமனாக அமைந்து விட்டது.

வளுக்கு எமபார்த்துன் மனைவித நேரத்தது என்ன

அவளை எவ்வளவோ தேற்றினேன். "எனக்கு இந்த வயதிலேயே, வாழ்க்கையின் எல்லை தெரிந்து விட்டதே இனிமேல் நான் ஏன் வாழவேண்டும்" என்று அவள் என்னைக் கேட்டது என் நெஞ்சில் இன்றும் கல் வெட்டைப் போல் பதிந்து கிடக்கிறது. அது மட்டுமா அவள் கேட்டாள்? “ஒரு புருஷனின் இரத்தத்தில் கருப்பொருள் இல்லை என்று மனைவிக்குத் தெரிந்து விட்டால் அவளுக்குத் புருஷனிடத்தில் மரியாதைக் குறைவும், தாழ்வு மனப் பான்மையும் எப்படி ஏற்படாமல் போகும். அந்தப் பாவத்திற்கு ஆளாக நான் விரும்பவில்லை" என்றும் என் மனைவி எனக்கு போதனைகளைக் கூறினாள். மிஸ்டர் கண்ணப்பன் நான் எத்தனை நோயாளிகளைக் காப்பாற்றி அவர்களைத் சிரிக்க வைத்திருக்கிறேன். என்னைச் சிரிக்க வைக்க இறைவன் மறந்துவிட்டான்."

"நான் சிரிக்காவிட்டாலும் பரவாயில்லே, என்னைத் தலிர வேறு தெய்வம் இல்லை என்று எண்ணி வாழ்ந்த என் மனைவியை இழந்து நான் தினசரி அழுது கொண்டிருக்கிறேன்!" கொரியன் விவரம் அறியாத குழந்தையைப் போல் தேம்பினான்.

"பெரிய டாக்டர் எழுதிய கடிதத்தை உடன் மனைவி படிக்காதிருந்தால் அவள் இந்த முடிவுக்கு வந்திருக்கமாட்டாள் அல்லவா?"

"நிச்சயமாக வந்திருக்கவே மாட்டாள். புருஷனும், மனைவியும் எவ்வளவு தான் பாசமுள்ளவர்களாக இருந்தாலும் சில விஷயங்களை மனைவியிடம் வடிகட்டித்தான் சொல்ல வேண்டும். மனித வாழ்க்கைக்கு-அதுவும் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு-என் வாழ்க்கைக்கு ஒரு அபாய - அறிவிப்பு " என்றான் கொரியன்.

கண்ணப்பன் நெற்றியைச் சுளித்தான்.