பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

வன் சீப்பும், கண்ணுடியும் கொண்டு வந்து வைத்தான். சுபத்ரா அந்தத் திசைப்பக்கமே திரும்ப வில்லை. அது, அந்த மாளிகைக்கே உரிய ஒரு பல்லுப் போன சிப்பு: சில்லுப்போன ஒரு கண்ணாடி!

கொஞ்ச நேரத்திற்குள்ளாக சுபத்ராவைக் கடத்திக் கொண்டு வந்த கார் புறப்பட்டு விட்டது. அப்போது சுபத்ராவின் மனத்தில், 'இந்த ராசாக்கிளி ராவுத்தரை விட தன்னைக் கடத்தி வந்தவர்கள் பரவாயில்லை. போல தோன்றியது. வெயிலில் நடந்து களைத்த அவள் மனதுக்கு பனைமரத்து நிழல்கூட ஆலமரத்து நிழலாகத் தெரிகிறது,

 

ராசாக்கிளி ராவுத்தர் புதுக்கோட்டையை சேர்ந்தவர். இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் ,அதாவது விபச்சாரத் தடைச் சட்டம் அமுலானதும் பிழைபிற்காக திருநெல்வேலிக்குக் குடியேறினார். அங்கு தொடங்கிய தொழில்தான் இது!புதுக்கோட்டையிலிருந்து போகும்போதே நான்கு குமரிப் பெண்களை உடன் அழைத்துப் போய்விட்டார். அதிக மூலதனம் போட்டு நாண்யமாக நடத்தும் வியாபாரத்தை விட இதில் அபரிமித லாபம் கிடைப்பதை ராசாக்கிளி தெளிவாக உணர்ந்து கொண்டர்ர்.

பத்து வருஷங்களுக்குள்ளர்க ராசாக்கிளி திருநெல்வேலியில் ஒரு செல்வந்தராகி விட்டார். பணக்காரகளை மதித்துப் பழக்கப்பட்ட பாமரர்கள், ராசாக்கிளியை மட்டும் எப்படிப் புறக்கணிக்க முடியும் ! அவர் நடந்தால் எழுந்து நிற்பது, அவர் பேச்சைத் தட்டாமல் கேட்டு நடப்பது என்பதெல்லாம் அந்தத் தெருவுக்கே கைவந்த கலையாகி விட்டது. எதிர்த்துப் பேசினால் எந்த அதிகாரியிடமாவது பிடித்துக் கொடுத்து விடுவார்; பிறகு அவரே போய் மீட்டுக்கொண்டு வருவதாக பாசாங்கு செய்வார் : எப்படியோ ராசாக்கிளி திருநெல்வேலியில் ஒரு பாப்புலர்’ மனிதராகி விட்டார்.

படிக்காதவர்கள் சில நேரங்களில் சிந்தனையாளர்ளைப்போல் பதில் சொல்லிவிடுகிறார்கள். ராசாக்கிளி தொழில் -விபச்சார மாளிகை நடத்துவது: யாராவது அவரைக் கேட்டால், 'வட்டிக் கடைக்காரன் பணத்தை வாடகைக்கு விடுவதைப்போல, சைக்கிள் கடைக்காரன் சைக்கிளை வாடகைக்கு விடுவதைப்போல நான் ரதிக்கிளி மாதிரிப் பெண்களே வாடகைக்கு விடுகிறேன்: இதுவும் ஒரு தொழில், தானே! திருடினால் குற்றம், கொலை செய்தால் குற்றம்! பிறருக்கு இன்பத்தைக் கொடுத்து அதற்குப் பணம் வாங்கிக்கொள்வது எப்படி குற்றமாகும்? சுவையான