பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29


"பெண்ணின் அழகு பூவின் அழகைப்போல் நிரந்தரமற்றது. ஆனால் பெண்ணின் குணம் தங்கத்தின் குணத்தைப் போல் ஒளிமங்காதது" என்று அடிக்கடி கண்ணப்பன் கண்ணாத்தாளிடம் கூறி அவளேப் பெருமைப்படுத்தியிருக்கிறான்.

கண்ணாத்தாளும் அவனிடம் அப்படித்தான் பழகினாள். எவ்வளவு நேரமானாலும் கண்ணப்பன் வந்த பிறகு தான் அவள் சாப்பிடுவாள். கண்ணப்பனுக்குப் பிடித்தமானதைத் தான் அவள் சமைத்து வைப்பாள். ஒரு பெண்ணுக்குப் புருஷன்தான் மூலதனம், புருஷன் அவளிடம் காட்டும் அன்புதான் மனைவிக்குக் கிடைக்கும் வட்டி-என் பதில் கண்ணாத்தாள் இரண்டாவது கண்ணகியாகவே விளங்கினாள்.


கண்ணாத்தாள் கொச்சிக்குத் திரும்பாதது கண்ணப்பனுக்குப் பலவிதமான சந்தேகங்களை கிளப்பிக் கொண்டிருந்தது. இத்தனை வயதுக்கு மேலே நமக்கு இனி பிள்ளேயே பிறக்காது என்று அவள் தீர்மானித்து தகாத முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? எப்போதுமே நெருக்கடியான நேரங்களில் தான் மனிதனுக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன! அதுவும் அடிக்கடி நெருக்கடிகளைச் சந்தித்திராத செல்லப்பிள்ளைகளுக்குக் குழப்பங்கள் வந்துவிட்டால் அவர்கள் கற்பனையின் உச்சக்கட்டம்வரை போய்த்தான் திரும்புவார்கள்.

"கண்ணப்பர் இதற்கெல்லாம் குழம்பலாமா?’’ - என்று யாராவது அவனைக் கேட்டால், அதிகமாக இலக்கியமோ, தமிழோ படித்து விட்டால் இப்படித்தான் என்பான். அதோடுவிடமாட்டான்- கவிச்சக்கரவர்த்தி கம்பன் சிறிய துன்பத்தைக்கூடத் தாங்கிக்கொள்ளமாட்டாராம்! நாவலாசிரியர் டூமாஸ் குடும்பக்கவலையால் நாவல் எழுதுவதையே நிறுத்தி விட்டாராம்; அதில் நான் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா?-என்று விரிவுரை வேறு சொல்ல ஆரம்பித்து விடுவான். புதிதாகச் சந்திப்பவர்கள் அவனை ஒரு மாதிரியாக நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவனது நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தைகளும் அமைந்து விடும்.

இளகிய உள்ளத்தை எளிதில் துன்பம் வசப்படுத்திக் கொண்டு விடுகிறது. கண்ணீரைக் கண்டு கலங்கும் நெஞ்சம் துன்பம் ஏற்பட்டதும் நடுங்கித் தவிக்கிறது. அதனால்தான் இளகிய நெஞ்சமுடையவர்கள் கோழைகளாக வாழத் தொடங்கிவிடுகிறர்கள்.

கண்ணப்பன் பிறவியில் கோழை அல்ல; சபலத்தால், தோல்வி மனப்பான்மையால் கோழையாகி