பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



21

"எப்படி வந்தது?" கொரியன் பிரியத்தோடும், ஆச்சரியத்தோடும் கேட்டான்.

"எனக்குக் கூட அது ஒரு சிதறலான நினைவாகத்தான் தோன்றியது. தெருவில் பாேய்க் கொண்டே இருந்தேன். கொரியன் டீ ஸ்டால் என்ற ஒரு போர்டைப் பார்த்தேன். அது முதல் உன்னை வலை பாேட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன்."

"உன் தமிழார்வமெல்லாம் எப்படி இருக்கிறது?"

"தமிழர்களைப் பொறுத்தமட்டில் பண ஆசையும், தமிழாசையும் ஒன்றுதான். விட்டுக்கொடுக்க மாட்டார்கள்!"

"குழந்தைகள்?"

"உனக்கு எத்தனை குழந்தைகள்? முதலில் நீ சொல்லு!"

"வைத்தியம் பார்க்க வரும் பிள்ளைகள்தான் என் பிள்ளைகள்!" - கொரியன் பெருமூச்சோடு இப்படிச் சொன்னான்.

"டாக்டர் என் கதிதானா உன் கதியும்! நான் எதிர்பார்க்கவில்லை கொரியன். நான் உன்னைச் சந்திக்க வந்ததே இந்தக் கவலையைத் தீர்த்துக் கொள்ள ஏதாவது மார்க்கமுண்டா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு போகத்தான்!” -கண்ணப்பனுக்கு வார்த்தைகள் சரியாக வரவில்லை.

"என் நிலைமை உனக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சில நேரங்களில் பிரார்த்தனைகளும் பயனற்றுப் போய் விடுவதுண்டு! என்னைப் பொறுத்த வரையில் இனி நான் தனி மரம்தான். என் மனதில் இருந்த ஆசைகள் இற்றுத் துாளாகி விட்டன. கடவுள் எனக்குப் பனைமரத்தைப் போல் நெடிய ஆயுளைக் கொடுத்தால் நான் ஆலமரத்து நிழலைப் போல் பலருக்கு பயன்படுவேன்!"

"இந்த விஷயம். உன் மனைவிக்குத் தெரிந்தால் அவர்கள் வேதனைப்பட மாட்டார்களா?"

"எப்படியோ அவளுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவள் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு எலும்புக் கூடாகி காற்றாேடு கலந்துவிட்டாள் கண்ணப்பா!"

"எப்போது இதெல்லாம் நடந்தது? எப்படி அவர்களுக்குத் தெரிந்தது?"

"புருஷனுக்கும், மனைவிக்குமிடையே கூட சில ரகசியங்கள் இருக்க வேண்டும் என்பதை என் மனைவியின்