பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



45

ஹோட்டலில் சாப்பிட்டால் ஏற்படும் திருப்தியைவிட எனது மாளிகைக்கு வந்தால் அதிகமான மனத்திருப்தி கிடைக்கும்' என்று விளக்கம் தருவார் ராவுத்தர்.

ராசாக்கிளிக்கு என்றைக்கும் போலீசில் பயம் இருந்ததில்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ராசாக்கிளியின் வசந்த மண்டபத்திற்கு வராத போலீஸ் அதிகாரிகளே இல்லை.

 

சுபத்ரா திருநெல்வேலிக்கு வந்து பத்து நாட்களாகி விட்டன. அசோகவனத்துச் சீதையைப் போல ராசாக்கிளி அவளைத் தனிமைப் படுத்திவைத்திருந்தார். இடையிடையே துாதுகள், மிரட்டல்கள் நடந்தன. எதற்கும் சுபத்ரா பணியவில்லை,

சுபத்ரா, நான் யாருக்கும் இவ்வளவு அவகாசம் அளித்ததில்லை! இன்னும் இரண்டே தினங்கள் உனக்குத் தருகிறேன். அதற்குள் உன் ம்னதை நீ சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். எனக்கு ஐந்து வருஷங்களாகக் கைராசிக்காரராக இருந்துவரும் காசியப்பர் நாளே மறு தினம் வருகிறார்' என்று எச்சரித்துப்போய் விட்டார் ராசாக்கிளி.

 

ந்த நாளும் வந்துவிட்டது. காசியப்பர் ஜவ்வாதுப் பொட்டு கமகமக்க குறித்த நாளில் வந்து விட்டார்.

ராசாக்கிளி காசியப்பருக்கு புது மாப்பிள்ளைக்கு அணிவிப்பதைப்போல் மாலை அணிவித்து வரவேற்றார்.

மாடியில் சுபத்ராவின் அறையில் வாசனைகள் தெளிக்கப்பட்டிருந்தன. ஊதுபத்திகள் ஒரு பக்கம் கண்ணீரைப் புகையாகக் கக்கிக் கொண்டிருந்தன, சுபத்ராவிற்காக வாங்கிவந்த ஒரு பந்து மல்லிகைப்பூ மேஜையில் சீண்டுவாரற்றுக் கிடந்தது. வெள்ளிக்கூஜாவில் நயம் -பசும்பாலும், அதனருகே இரு ஆப்பிள் பழங்களும் காத்திருந்தன.

ராவுத் தர், காசியப்பரை மரியாதையுடன் உள்ளே அழைத்து வந்தார்.

சுபத்ரா, நானும் போகுது போகுதுனு. பாக்கிறேன். நீயோ உச்சாணிக் கொம்பில் ஏறிட்டே போறே! உன்னைவிட ராணிகளையெல்லாம் பாத்தவரு