பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

என்றும் மதவாதிகள் கூறுகிறார்கள். என் தலையெழுத்து இப்படி! அதற்காக நான் சனியும் புதனும் எண்ணெய் தேய்த்துக் குளித்திருந்தால் அந்தத் தலையெழுத்து அழிந்து போயிருக்குமா?" கொரியன் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணப்பனின் உள்ளம் கண்ணாத்தாளைத் தேடி ஓடியது.

"அப்படியானால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை என் மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்து விடட்டுமா?"

"தேவை இல்லை என்பது என் கருத்து. உன் மனைவிக்குத் தெரியாமலே நீ சோதித்துக்கொள்வதுதான் உன் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு. உனக்கு 'ஆல்ரைட்' என்று டாக்டர் சொல்லிவிட்டால் அதற்குப் பிறகு வேண்டுமானல் உன் மனைவியைச் சோதிக்கலாம். இந்த விஷயம் உன் மனைவிக்குத் துளியும் தெரியக்கூடாது. ஏனென்றால் பெண்கள் பிறவியில்தான் கோழைகள்: வாழ்க்கையில் முடிவெடுப்பதில் வேகமானவர்கள். தவறு யார் பக்கம் என்று யோசிக்காமலே தற்கொலைக்கும் தயாராகிவிடுவார்கள், சாவது எளிது. ஆனால் சாவை நினைப்பதுதான் பயங்கரமானது-என்ற தத்துவங்களெல்லாம் தென்னாட்டுப் பெண்களிடம் தோற்றுப்போய்விட்டன" டாக்டர் கொரியன் தன் மனைவியின் அகால மரணத்தின்மூலம் பெண்களைப்பற்றி ஒரு தீர்க்கமான ஆராய்ச்சியையே செய்து முடித்தவரை போலப் பேசினான்.

கண்ணப்பன் சோதனைக்குத் தயாரானான், சோதனைக்குப் பிறகு அந்தப் பெரிய டாக்டர் பல கேள்விகளைக் கண்ணப்பனிடம் கேட்டார்.

"உங்களுடைய பால்ய காலத்தை எங்கே கழித்தீர்கள்?"

"கண்டியில் பத்து வருஷங்கள் இருந்தேன்!"

"அங்கே உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு?"

"தமிழ்ப்பணி, தேகப்பயிற்சி, மல்யுத்தம் இவைகள்தான் எனது பொழுதுபோக்குப் பணிகள்!"

"அந்தக் காலங்களில் நீங்கள் ஏதாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டதுண்டா?"

"வடஇந்தியாவில் இருந்து வந்த புகழ்பெற்ற அந்தக் குஸ்திபயில்வானிடம் நாங்கள் மல்யுத்தம் பயின்றாேம். அவர் எங்கள் உடல்வளத்திற்காக தினசரி கொஞ்