பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


2. ஒரு கலவையிலிருந்து கரைதிறன் மூலம் ஒரு பகுதியைப் பிரித்தல்.

23. அருவிமுறை என்றால் என்ன?

பல நிலைகளில் நடைபெறும் முறை. எ-டு. யுரேனியத்தை வளமாக்கும் விரவல் முறை.

24. வெள்ளீயமேற்றல் என்றால் என்ன?

பித்தளை, வெண்கலம், செம்பு ஆகியவற்றிற்கு மெல்லிய வெள்ளீயத் தகடேற்றல்.

25. எஃகுத் தணிப்பு என்றால் என்ன?

காய்ச்சிய எஃகை விரைவாக குளிரச் செய்ய நீரில் அல்லது எண்ணெயில் தோய்த்தல்.

26. நேர்முனை மின்னேற்றஞ் செய்தல் என்றால் என்ன?

அரிமானத்தைத் தடுக்கும் முறை, அலுமினிய உலோகக் கலவையில் அலுமினிய ஆக்சைடை மெல்லியதாகப் படிய வைத்தல்.

27. சிலிகன் முலாம்பூசுதல் என்றால் என்ன?

உயர்வெப்பநிலையில் உலோகத்தில் சிலிகனைப் பரவச் செய்தல்.

28. உருக்கி இணைத்தல் என்றால் என்ன?

உலோகம், பீங்கான் முதலியவற்றைத் தூள் செய்து, அவற்றின் உருகுநிலைக்குக் கீழ் வெப்பப்படுத்த, அவை உறையும். இச்செயலே உருக்கி இணைத்தல்.

29. உருக்கி இணைத்த கண்ணாடி என்றால் என்ன?

உருக்கி இணைத்தல் முறையில் செய்யப்படுவது. இதில் துளை இருக்கும். ஆகவே, எடையறிபகுப்பில் வீழ்படிவுகளை வடிகட்டவும் பயன்படுதல்.

30. வறுத்தல் என்றால் என்ன?

உலோகத்தைப் பிரித்தலுக்குமுன், தாது காற்றில் சூடாக்கப்படுதல். இதனால் அதிலுள்ள மாசுகள் நீக்கப்படுதல். இதனால் அடுத்த நிலையை மேற்கொள்ள ஏதுவாகும். உலோகப் பிரிப்பு முறைகளில் ஒன்று. எடு. இரும்பின் சல்பைடு தாதுவை வறுத்தல்.

வே.33