பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


6. பகுத்துப்படிகமாக்கல் என்றால் என்ன?

ஒரு நீர்மத்தில் கரைந்துள்ள இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களைப் பிரிக்கும் முறை. இதில் அவற்றின் வேறுபட்ட கரைதிறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. எ-டு. உப்புக் கரைசலிலுள்ள உப்பைப் படிகமாக்கிப் பிரித்தல்.

7. வீழ்படிவு என்றால் என்ன?

தயிர் போன்று கரையாப் பொருள். வேதிவினையினால் ஒரு கரைசலில் உண்டாவது. எ-டு. அய்டிரோகுளோரிகக் காடியில் வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலைச் சேர்க்க வெள்ளிக் குளோரைடு வீழ்படியும்.

8. வீழ்படிதல் என்றால் என்ன?

வீழ்படிவு உண்டாகும் செயல் வீழ்படிதல் ஆகும்.

9. கழிவுறச் செய்தல் என்றால் என்ன?

1. கரைவதும் கரையாததுமான கனிமக்கலவையைக் கரைப்பான்களோடு சேர்த்து வினைப்படுத்தும் முறை.
2. பொன் முதலிய விலை உயர்ந்த உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கும் முறை.

10. வெற்றிட வடித்துப்பகுத்தல் என்றால் என்ன?

குறைந்த அழுத்தத்தில் நீர்மங்களை வடிக்கும் முறை. இதனால் கொதிநிலை உயரும் அல்லது தாழும். இது நீர்மக் கலவையைப் பிரிக்கும் முறை.

11. புடமிடல் என்றால் என்ன?

வெள்ளி அல்லது பொன்னை அதன் மாசுகளிலிருந்து வெப்பப்படுத்திப் பிரிக்கும் முறை. இதில் எளிதில் ஆக்சிஜன் ஏற்றம் பெறக்கூடிய உலோகம் (காரீயம்) பயன்படுத்தப்படுகிறது.

12. பதங்கமாதல் என்றால் என்ன?

ஒரு திண்மத்தை வெப்பப்படுத்தி நேரடியாக ஆவியாக்கல். எ-டு, சூடம். கலவையைப் பிரிக்கும் முறை,

13. பதங்கமாகும் பொருள்கள் யாவை?

சூடம், அயோடின்.

14. தெளிய வைத்து இறுத்தல் என்றால் என்ன?