இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இடைக்காலப் பல்லவர்
57
காலம் கி.பி. (575-615)
இடைக்காலப் பல்லவர் பட்டயங்களை நன்கு ஆராய்ந்த அறிஞர் கீழ்வருமாறு அரசமுறை வகுத்துளர்.
குமார விஷ்ணு I | |||||
கந்தவர்மன் I | |||||
வீரகூர்ச்சவர்மன் | |||||
கந்தவர்மன் II | |||||
(இவன் பிள்ளைகள் மூவர்) | |||||
சிம்மவர்மன் | இளவரசன் விஷ்ணுகோபன் |
குமாரவிஷ்ணு III | |||
கந்தவர்மன் II நந்திவர்மன் |
சிம்மவர்மன் II விஷ்ணுகோபவர்மன் |
புத்தவர்மன் குமாரவிஷ்ணு III | |||
சிம்மவிஷ்ணு |
(1) களடர்த்திரி என்பவனைக் ‘குடும்பத் தலைமணி’ என்றும், ‘இலக்குமி கணவன்’ என்றும் பட்டயங்கள் குறித்தலால், கிருஷ்ண சாஸ்திரியார் கருத்துப்படி இவனுக்குக் ‘குமாரவிஷ்ணு’ என்னும் பெயர் இருந்தது என்று கோடலில் தவறில்லை. மேலும் இவனே சமுத்திரகுப்தனை எதிர்த்த விஷ்ணுகோபனாக இருக்கலாம்; ‘இருத்தல் இயலாது’ என்று மறுக்கக் காரணம் ஒன்றும் இல்லை. முற்காலப் பல்லவருள் கடைசி அரசன் புத்தியங்குரன். இடைக்காலப் பல்லவருள் தலைமணி போன்றவன் களபர்த்திரி அல்லது குமார விஷ்ணு. இவ்விருவருக்கும் இடையில் வேறு அரசர் ஆள