பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருகத மதத்தை ‘இந்து’ மதத்தில் சேர்க்க முயன்றது

205



வெற்றியைப் பாண்டியன் பட்டயம் கூறுகிறது போலும்! இப் போரி கங்க அரசனான பூதுகனும் பல்லவன் சார்பில் நின்று தோற்றான்.[1]

பல்லவர்-பாண்டியர் போர் 2

நிருபதுங்கன் பட்டம் பெற்றபிறகு பெரும்படை திரட்டி பாண்டியனை ஒழிக்க முற்பட்டான். அப்பொழுது அரிசிலாற்றங் கரையில் கொடும் போர் நடந்தது. அம் முறை பல்லவன் வெற்றி பெற்றான். அதனாற்றான் பாகூர்ப் பட்சியம். “முன் ஒருமுறை பாண்டியர்க்குத் தோற்ற பல்லவப் படை இப்பொழுது அரசனது அருளால் (நிருபதுங்கவர்மன் செலுத்தியதால்) வெற்றி பெற்றது” என்று கூறுகின்றது.

இச் செய்திகளால், (1) பல்லவர் நாட்டின் தென்பகுதியே குழப்பமான நிலையில் இருந்தது. (2) பாண்டியன் பல்லவரிடம் இருமுஜற தோற்றதால் பாண்டியன் பேரரசு நிலை தளர்ந்தது என்பன நன்குணரலாம்.

ஈழ நாட்டுப் படையெடுப்பு

பாண்டிய நாட்டில் கலாம் விளைத்துச் சீமாறனுக்கு எதிரியாக மாய பாண்டியன் என்பவன் ஒருவன் தோன்றினான். அவனைச் சீமாறன் தோற்கடித்து விரட்டினான். ஒடிய மாய பாண்டியன் ஈழத்து அரசனிடம் சரண் புகுந்தான். ஈழத்தரசன் பெரும் படை திரட்டிப் பாண்டிய நாட்டின்மேல் படையெடுக்க சமயம் பார்த்திருந்தான். அதனை உணர்ந்த சீமாறன், தன் பகைவனாக இருந்து தன்னை அரிசிலாற்றங்கரையில் தோற்கடித்த நிருபதுங்கனிம் நட்புக் கொண்டு அவனது கடற்படைத் துணையால், ஈழத்தின்மேல் படையெடுத்து வென்றான் என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.[2]


  1. M.A.R. 1907, p.63
  2. Ep. Indica, Vol XVIII, p.13, Dr. C. Minakshi’s “Ad and S.Life under the Păllavas, pp. 162-163.