பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

பல்லவர் வரலாறு



வைணவம்

சைவம் தமிழ் நாட்டிற்கு உரித்தானது போன்றே வைணவமும் இந்நாட்டிற்கு உரியதே ஆகும். இதனை மாயோன் மேய காடுறை யுலகம் என்ற தொல்காப்பியர் சூத்திரம் நன்கு விளக்கும். இதன் வளர்ச்சி ஓரளவு சிலப்பதிகாரத்தால் நன்கறியலாம். சைவத்தில் பல புதிய கொள்கைகள் புகுந்தாற் போல வைணவத்திற் புகுந்த புதியன எவை என்பது அறியக்கூடவில்லை. ஆயின், திருமாலின் பல அவதாரக் கதைகளும் புராணச் செய்திகளும் பிறவும் வன்மையுற வழக்குப்பெற்ற காலம் பல்லவர் காலம் என்னலாம்.

வைணவ வேந்தர்

இவ் வைணவ சமயம் முதலில் பெளத்த சமயத்துடனும் பின்னர்ச் சமண சமயத்துடனும் போரிட்டது. திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் இவர்தம் பாசுரங்கள் அவர் காலச் சமய நிலையை நன்குணர்த்துவன ஆகும். பல்லவ அரசருள் இளவரசன் விஷ்ணுகோபன். இரண்டாம் சிம்மவர்மன், விஷ்ணுகோபவர்மன் முதலியோர் ‘பரம பாகவதர்’ என்று நம்மைக் கூறிக்கொண்டனர். ‘சமயங் காப்போர்’ என்றும் தம்மைப் பாராட்டிக் கொண்டனர். பிற்காலப் பல்லவருள் சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன் முதலியோர் சிறந்த வைணவப்பற்று உடையவர். அவர்களாற்றான் பல்லவப் பெருநாட்டில் பெருமாள் கோவில்கள் பல தோன்றின. குகைக் கோவில்கள் பல குடையப்பட்டன; வைணவ மடங்கள் காவேரிப்பாக்கம் முதலிய இடங்களில் தோன்றின. சைவத்தைப் பின்பற்றிய பல்லவ அரசரும் வைணவத்திற்கும் பலவகையில் ஆக்கம் அளித்தனர். சுருங்கக்கூறின், பல்லவர் காலத்திற் சைவமும் வைணவமும் பல்லவ அரசரால் பேணி வளர்க்கப் பெற்றன என்று கூறல் தவறாகாது.

சமயக் கொடுமை

முதலிற் பல சமயங்களும் நன்முறையில் நடந்துவந்தன. ஆயின், நாளடைவில் சமய வாதங்கள் மிகுதிப்பட்டன. அவற்றால்