பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

269


புண்கெழுவு செம்புனலாறோடப் பொருதவரை
வன்கழுவில் தைத்த மறையோனை”

[1]

நம்பி, சேக்கிழார்க்கு 200 ஆண்டுகள் முற்பட்டவர். இவர் எதனைச்சான்றாகக்கொண்டு இங்ஙனம் பல இடங்களிற் குறித்தார்? இவர் காலத்தில் அச் செய்தி நாடெங்கும் பரவி இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. அன்றோ? இது நிற்க.

வைணவர் கொடுமை

(1) இலக்கியச் சான்று: திருமங்கை ஆழ்வார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர். இரண்டாம் நந்திவர்மன் காலத்தினர். இவர் சோழநாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் சிறந்த வைணவ பக்தர். இவர் நாகப்பட்டினத்துப் பெளத்த விகாரத்தில் இருந்த பொன்னாற் செய்யப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து, அதைக் கொண்டு பல கோவில் திருப்பணிகள் செய்தனர் என்று குருபரம்பரை கூறுகின்றது. இவர் பெளத்த-சமண சமயங்கள் மீது நாயன்மாரைப்போலவே வெறுப்புற்றவர் என்பதை இவர் பாடல்களைக் கொண்டு நன்குணரலாம்.

(2) இவரது காலத்தவரே தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். அவரும் சமண-பெளத்தரை அறவே வெறுத்தவர்; அமயம் வாய்ப்பின், அவர்களைக் கொல்வதே நல்லது என்ற எண்ணம் கொண்டவர். இதனை அப்பெரியார் பாடலே உணர்த்தல் காண்க:

“வெறுப்பொடு சமணமுண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையே ஆங்கே
 அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகர் உளானே!”

பட்டயச் சான்று

“இரண்டாம் நந்திவர்மன் தரும சாத்திர முறைப்படி நடவாத மக்களை அழித்து, இந்த நிலத்தைக் கைப்பற்றி, வரியிலியாகப்


  1. wide his ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை 11ஆந்திருமுறை.