பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பல்லவர் வரலாறு



அவற்றில் மாமண்டூர்ச்சிற்றுரை நோக்கியுள்ள இரண்டு குகைகளில் ஒன்று மகேந்திரன் கல்வெட்டைப் பெற்றுள்ளது. அஃது இவன் புகழைப் பலவாக விரித்துக் கூறுகின்றது. அக்கோவில் தூண்களும், அவற்றில் உள்ள தாமரை மலர்களும் மகேந்திரவாடியில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்துள்ளன. உள்ளறையில் சிலை இருந்திருத்தல் வேண்டும். இங்கும் ஓர் ஏரி மகேந்திரனால் வெட்டப்பட்டது.

(5) மகேந்திரவாடி

இவ்வூர் அரக்கோணத்திற்கு அணிந்தாயுள்ள சோழ சிங்கபுரம் (சோளிங்கர்) என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே மூன்றுகல் தொலைவில் உள்ளது. ஊருக்குக் கிழக்கே உள்ள வெளியில் ஒரு குன்று இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு சிறிய குகைக்கோவில் இருக்கின்றது. இக் கோவில் வல்லத்துக் கோவிலைப் போன்றே காணப்படுகின்றது. தூண் நடுவில் பட்டயங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களால் அழகு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டில் அரசன் குணபரன் எனப்பட்டுள்ளான். கல்வெட்டுப் பகுதி ‘கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பின் கீழ்க் காண்க. இது பெருமாள் கோவில்: ‘மகேந்திர விஷ்ணு கிரஹம்’ என்னும் பெயருடையது. இங்கிருந்த ஏரி மகேந்திரன் வெட்டியதாகும்.

(6) தளவானூர்

இது தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ளது; ‘பேரணி’ என்னும் புகைவண்டி நிலையத்துக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே, ‘பஞ்ச பாண்டவர் மலை’ இருக்கின்றது. அதன் தென் பக்கத்தில் மகேந்திரன் குடைவித்த கோவில் இருக்கிறது. அது “சத்துரு மல்லேஸ்வராலயம்’ என்னும் பெயர் கொண்டது. அக்கோவிலின் உள்ளறை குகைவாயிலை நோக்காது இடப்புறமாக இருக்கின்றது. அஃதாவது குகை தெற்கு முகமாக இருக்கிறது; உள்ளறை கிழக்கு நோக்கி